புதிய தனியார் சோலார் பவர் பிளான்ட்க்கு எதிர்ப்பு; மக்கள் திரள் போராட்டம் நடத்த தீர்மானம்
புதிய தனியார் சோலார் பவர் பிளான்ட்க்கு எதிர்ப்பு; மக்கள் திரள் போராட்டம் நடத்த தீர்மானம்
ADDED : மே 12, 2024 08:34 PM

மயிலாடுதுறை:சீர்காழி அருகே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்தனியார் பவர் பிளான்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கீழநெப்பத்தூர் கிராமத்தில் மெகா கிரீட் ஓல்ட்ராஸ் என்று தனியார் நிறுவனம் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆதரவாகவும் பெரும்பான்மையானோர் எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர் இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது இதனைத் தொடர்ந்து வருவாய் துறை இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின்பு நிரந்தர தீர்வு காணப்படும் என அறிவுறுத்தியுள்ளது இந்நிலையில் நேற்று கீழநெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கமிங் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்லப்பா சி.பி.ஐ.எம்.எல். கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தனியார் சோலார் பவர் பிளான்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் மக்களை திரட்டி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.