பணிக்கு வராத ரேஷன் ஊழியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு
பணிக்கு வராத ரேஷன் ஊழியர் சம்பளத்தை பிடிக்க உத்தரவு
ADDED : செப் 05, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க ஊழியர்கள், இன்று, மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விபரம்:
வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், 5ம் தேதி ரேஷன் பணிக்கு பாதிப்பு ஏற்படாதபடி, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.