sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெருங்கற்கால கல் வட்டங்கள்; உடுமலை அருகே கண்டுபிடிப்பு

/

பெருங்கற்கால கல் வட்டங்கள்; உடுமலை அருகே கண்டுபிடிப்பு

பெருங்கற்கால கல் வட்டங்கள்; உடுமலை அருகே கண்டுபிடிப்பு

பெருங்கற்கால கல் வட்டங்கள்; உடுமலை அருகே கண்டுபிடிப்பு


ADDED : ஜூன் 10, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, சங்கராமநல்லுார், மடத்துார் பகுதியில், 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.

இவற்றை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த, தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, சிவக்குமார், அருட்செல்வன், பாலு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அவர்கள் கூறியதாவது:

ஆதிச்சநல்லுார், கொடுமணல் போல, இங்கும் ஏராளமான இரும்பு எரிகற்களும், பெருங்கற்கால கல்வட்டங்களும் காணப்படுகின்றன.

இப்பகுதியில் உள்ள ஐவர் மலை எனப்படும் அயிரை மலை குறித்து, பதிற்றுப்பத்து எனும் சங்க கால பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 'குவார்ட்ஸ்' எனப்படும் வெள்ளை நிற கற்கள் அதிகளவு காணப்படுவதால், அணிகலன்கள் உற்பத்தி தொழிற்சாலையாகவும் இருந்திருக்கலாம். மேலும், மடத்துார், மயிலாபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், ஏராளமான மூடுகற்கள், நிலத்தை உழும்போது தாழிகள், ஓடுகள் அதிகளவு கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில், தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு செய்தால், ஆயிரம் ஆண்டு பழமையான வசிப்பிடம் குறித்தும், ஏராளமான தொல்லியல் சான்றுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us