sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைமை நீதிபதிக்கு ஓய்வூதியர்கள் தபால்

/

தலைமை நீதிபதிக்கு ஓய்வூதியர்கள் தபால்

தலைமை நீதிபதிக்கு ஓய்வூதியர்கள் தபால்

தலைமை நீதிபதிக்கு ஓய்வூதியர்கள் தபால்


ADDED : செப் 08, 2024 02:17 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அகவிலைப்படி உயர்வு வழக்கை விரைவுபடுத்தக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் தபால் அனுப்பி வருகின்றனர். இதுவரை, 3,000க்கும் மேற்பட்ட பதிவு தபால்கள் அனுப்பி உள்ளனர்.

இது குறித்து, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் கதிரேசன் கூறியதாவது:

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு, 10,000 ரூபாய்க்கு குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அத்துடன் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை, 2015 நவம்பர் முதல் அரசு நிறுத்தி விட்டது.

இது தொடர்பாக, பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்த விவகாரத்தில், ஓய்வூதியர் நல சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

அதை விரைவுபடுத்தக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிவு தபால் மற்றும் இ - மெயில் வாயிலாக கடிதம் அனுப்பி வருகிறோம்.

இதுவரை, 3,000க்கும் மேற்பட்ட பதிவு தபால்களை அனுப்பி உள்ளோம். வரும் 10ம் தேதிக்குள் 10,000 பதிவு தபால்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us