ADDED : ஜூலை 25, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மாற்றுத்திறனாளிகள் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வுகளில் பங்கேற்க வசதியாக, அரசு வேலை வாய்ப்பு பயிற்சித்துறை சார்பில், சென்னை, மயிலாப்பூர் சி.எஸ்.ஐ., காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில், ஆக., 1 முதல், உணவு, தங்கும் விடுதி வசதியுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர், ஜூலை 29ம் தேதிக்குள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வாயிலாகவும், scdaplacement@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.