sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசியல் படுகொலைகளால் மக்கள் அச்சம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி

/

அரசியல் படுகொலைகளால் மக்கள் அச்சம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி

அரசியல் படுகொலைகளால் மக்கள் அச்சம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி

அரசியல் படுகொலைகளால் மக்கள் அச்சம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி


ADDED : ஜூலை 12, 2024 05:16 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: 'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி' என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை ஆளும்கட்சி வாரி இறைத்துள்ளது. கப்பியாம்புலியூரில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தி.மு.க.,வினரின் அத்துமீறல்களை தேர்தல் அதிகாரிகள், போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர். இதை அனைத்தையும் மீறி மக்கள் ஆதரவுடன் பா.ம.க., வேட்பாளர் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த அரசியல் படுகொலைகள் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அச்சமின்றி வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் எழுத வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us