sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு ஜாமினில் வந்தவர் அட்டூழியம்

/

வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு ஜாமினில் வந்தவர் அட்டூழியம்

வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு ஜாமினில் வந்தவர் அட்டூழியம்

வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு ஜாமினில் வந்தவர் அட்டூழியம்


ADDED : ஜூன் 11, 2024 05:19 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை, டி.பி.,சத்திரம், ஜோதி அம்மாள் நகர் ஒன்பதாவது தெருவில், குடும்பத்துடன் வசிப்பவர் அமுதா, 30. இவரது வீட்டின் அருகில் கடந்தாண்டு, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கஞ்சா புகைத்துள்ளனர்.

இதுகுறித்து, டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் அமுதா புகார் அளித்தார். இதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த சந்தேஷ், 24, என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து கடந்த மாதம் வெளியே வந்த சந்தோஷ், கூட்டாளிகளுடன் சேர்ந்து, அமுதா வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது, அமுதாவின் அக்கா கணவரான செந்தில்குமார் என்பவரை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த வழக்கில், மீண்டும் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சந்தோஷ் கடந்த 8ம் தேதி, ஜாமினில் வெளிவந்து உள்ளார்.

இந்த முன்விரோதத்தில், கூட்டாளிகளுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, காலி மதுபாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீயிட்டு, அமுதா வீட்டின் மீது வீசிவிட்டு தப்பியுள்ளார்.

சத்தத்துடன் வெடித்த பெட்ரோல் குண்டால், வீட்டின் தடுப்புச் சுவரில் மட்டும் தீப்பிடித்து எரிந்தது. அமுதா குடும்பத்தினர் உயிர் தப்பினர். இதைப் பார்த்த அங்கிருந்தோர், மணலைக் கொட்டி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து, டி.பி.சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, சந்தோஷின் கூட்டளியான கமல், 24, என்பவரை நேற்று கைது செய்தனர். சந்தோஷ் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us