sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் நான்கு வாரங்களில் போலீஸ் பாதுகாப்பு

/

அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் நான்கு வாரங்களில் போலீஸ் பாதுகாப்பு

அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் நான்கு வாரங்களில் போலீஸ் பாதுகாப்பு

அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் நான்கு வாரங்களில் போலீஸ் பாதுகாப்பு

2


ADDED : ஜூலை 10, 2024 03:44 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 03:44 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும், நான்கு வாரங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தேர்தலை அமைதியாக, ஜனநாயக முறையில் நடத்துவதற்கு உரிய வழிமுறைகளை பிறப்பிக்கவும், விதிகளின்படி சங்கங்கள் இயங்கவும் உத்தரவிடக்கோரி, ஆறு வழக்கறிஞர்கள் சேர்ந்து, 2015ல் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் நடந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சில, பதவிக்காலம் முடிந்தும் நிர்வாகிகள் தேர்தலை நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தாதது, சங்க விதிகளை மீறியது மட்டுமின்றி, ஜனநாயக கொள்கைகளையும் மீறுவதாகும். விதிகளின்படி, சங்கங்கள் செயல்படவில்லை என்றால், அங்கீகாரத்தை ரத்து செய்ய பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது.

வழக்கறிஞர்களோ, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோ, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. பார் கவுன்சில் நிர்வாகத்தில் தவறு நடந்தாலும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கான இடம், நீதிமன்ற வளாகங்களில் ஒதுக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் அமைதியாக இயங்க, சங்கங்களும் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

நீதிமன்ற வளாகங்களில் இயங்கும் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. உயர் நீதிமன்றத்துக்கு, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், நீதிமன்றம் அமைதியான முறையில் இயங்குகிறது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகங்களிலும், மாநில போலீசாரை பணியமர்த்த வேண்டும். நீதிமன்றங்களில் அசல் ஆவணங்கள், ஆதாரங்கள், பொருட்கள் உள்ளன. அதற்கு, போதிய பாதுகாப்பு இல்லை. இரவு நேர காவலர் மட்டுமே பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை.

சில வழக்கறிஞர்கள், வழக்காடிகளின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. எனவே, அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும், நான்கு வாரங்களுக்குள் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம்முடியும் தருவாயில், விதிகளின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்த தவறினால், தனி அதிகாரியை நியமித்து, சங்க நிர்வாகத்தை கையில் எடுத்து, நான்கு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தவில்லை என்றால், சங்கத்துக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இடத்தை காலி செய்யவும்நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us