sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை கடலில் மாசு ஒழிப்பு ஒத்திகை

/

சென்னை கடலில் மாசு ஒழிப்பு ஒத்திகை

சென்னை கடலில் மாசு ஒழிப்பு ஒத்திகை

சென்னை கடலில் மாசு ஒழிப்பு ஒத்திகை


ADDED : மே 15, 2024 12:12 AM

Google News

ADDED : மே 15, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை கடலில் மாசு ஒழிப்பு ஒத்திகை நடந்தது.

இந்திய கடலோர காவல்படை, மண்டல அளவிலான மாசு ஒழிப்பு ஒத்திகை பயிற்சியை மூன்று நாட்கள் நடத்த முடிவு செய்தது.

அதன்படி, சென்னை துறைமுகம், எண்ணெய் மாசு அகற்றும் நிறுவனங்கள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து, மூன்று நாள் ஒத்திகையை நேற்று முன்தினம் துவக்கியது.

முதல் நாள் மாசு ஒழிப்பு குறித்த விவாதம் நடந்தது. நேற்று கடலில் எண்ணெய் மாசு ஏற்பட்டால், அதை அகற்றுவது குறித்த ஒத்திகை நடந்தது.

இதில், கடலோர காவல்படை, பாதுகாப்பு கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள், சென்னை துறைமுக கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இறுதி ஒத்திகை, இன்று காலை 6:00 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ளது. கடலில் மாசு ஏற்பட்டால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதற்காக, இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us