sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் பரவுகிறது 'பொன்னுக்கு வீங்கி' நோய்; தடுப்பூசி நிறுத்தப்பட்டதால் மீண்டும் பாதிப்பு

/

தமிழகத்தில் பரவுகிறது 'பொன்னுக்கு வீங்கி' நோய்; தடுப்பூசி நிறுத்தப்பட்டதால் மீண்டும் பாதிப்பு

தமிழகத்தில் பரவுகிறது 'பொன்னுக்கு வீங்கி' நோய்; தடுப்பூசி நிறுத்தப்பட்டதால் மீண்டும் பாதிப்பு

தமிழகத்தில் பரவுகிறது 'பொன்னுக்கு வீங்கி' நோய்; தடுப்பூசி நிறுத்தப்பட்டதால் மீண்டும் பாதிப்பு


ADDED : ஏப் 04, 2024 11:54 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழகத்தில் புதிதாக 'பொன்னுக்கு வீங்கி' எனப்படும் 'மம்ஸ்' வைரஸ் நோய் பெண் குழந்தைகளை தாக்குவதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கின்றனர் டாக்டர்கள்.

அவர்கள் கூறியதாவது:

குழந்தைகள் பிறந்த ஒன்பதாவது மாதத்தில் எம்.எம்.ஆர்., எனப்படும் 'மம்ஸ்… மீஸில்ஸ்… ரூபெல்லா' வைரஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டது. 'மம்ஸ்' வைரஸ் என்பது உமிழ்நீர் சுரக்கும் சுரப்பியை தாக்கும் ஒரு வைரஸ். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் தாடைப்பகுதி காது சேரும் இடத்தில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் முழுங்க முடியாது. உணவு சாப்பிட முடியாது. வலி, காய்ச்சலால் குழந்தைகள் அவதிப்படுவர். பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளே இந்நோய்க்கு இலக்காகி இருந்தனர். 2016 ம் ஆண்டு வரை மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் எம்.எம்.ஆர். முத்தடுப்பு ஊசி குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வந்தது. 2014 ம் ஆண்டு வரை தடுப்பூசியால் குழந்தைகள் இந்நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

2016ம் ஆண்டுக்கு பிறகு 'மம்ஸ்' வைரஸ் எதிர்ப்புக்கான தடுப்பு மருந்து நிறுத்தப்பட்டது. 'மீஸில்ஸ், ரூபெல்லா' தடுப்புக்கான எம்.ஆர். தடுப்பூசியே தற்போது வரை குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. பத்தாண்டுகளாக இந்நோயின் தாக்கமின்றி குழந்தைகள் இருந்த நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸ் பரவியுள்ளது. மதுரையில் மட்டும் 10 குழந்தைகளும் பிற மாவட்டங்களில் 5 முதல் 7 குழந்தைகள் வரை பொன்னுக்கு வீங்கி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை என்ன


வெயில் காலத்தில் பரவும் நோய் இது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் மூலம் மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவும். தொண்டைவலி, காய்ச்சலுக்கு மருந்துகள் கொடுக்க முடியுமே தவிர இதற்கென தனிப்பட்ட மருந்து கிடையாது. மிகவும் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கை வைத்தியம் செய்யக்கூடாது.

இவ்வாறு தெரிவித்தனர்.

போலியோ நோய் ஒழிக்கப்பட்ட நிலையிலும் தற்போது வரை குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. அதேபோன்று மீண்டும் எம்.எம்.ஆர். தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.






      Dinamalar
      Follow us