ADDED : ஜூன் 30, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவரது பதவி காலம், இன்று நிறைவடைய இருந்த நிலையில், அவருக்கு 2025 மே 19 வரை, பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆணையை, நேற்று கவர்னர் மாளிகையில், கவர்னர் ரவி அவரிடம் வழங்கினார். 'அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுப்போம்' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தெரிவித்த நிலையில், ஜெகநாதனுக்கு, கவர்னர் பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளார்.

