sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறையில் மோதலை தடுக்க கைதிகளுக்கு கட்டுப்பாடு

/

சிறையில் மோதலை தடுக்க கைதிகளுக்கு கட்டுப்பாடு

சிறையில் மோதலை தடுக்க கைதிகளுக்கு கட்டுப்பாடு

சிறையில் மோதலை தடுக்க கைதிகளுக்கு கட்டுப்பாடு


ADDED : மார் 15, 2025 12:43 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சிறை வளாகத்தில் கைதிகள் இருக்கும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், சென்னை புழல் உட்பட, 142 சிறைகள் உள்ளன. இவற்றில், 21 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளுக்குள் மோதல், சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கைளை தடுக்க, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிறைகளில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், காலை 6:00 முதல் மாலை, 5:45 மணி வரை திறந்து வைக்கப்படும். காலை 6:00 - 8:00க்குள் கைதிகள் குளித்து விட்டு அறைக்கு திரும்பி விட வேண்டும். அதன்பின், காலை உணவு வழங்கப்படும். மதிய உணவு பகல், 11:30 மணிக்கு தயாராகி விடும்.

மதிய உணவுக்கு பின், காற்றோட்டமுள்ள இடங்களில் அமர்ந்து பேச, கைதிகள் அனுமதிக்கப்படுவர். மாலை, 5:45க்குள், அவர்கள் தங்களுக்கான அறைக்கு திரும்பி விட வேண்டும். இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டு உள்ளது. சிறை உள்வளாகத்தில், கைதிகள் நடமாடும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக, அவர்களுக்கான குளியல், உணவு நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறைகளில் இருந்து வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே, அவர்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவர். அதுவும் ஒவ்வொரு குழுவாக அனுமதிக்கப்படுவர் என, கூடுதல் டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us