sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இயர்போன் பயன்படுத்துவோருக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

/

இயர்போன் பயன்படுத்துவோருக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

இயர்போன் பயன்படுத்துவோருக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

இயர்போன் பயன்படுத்துவோருக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை


ADDED : பிப் 28, 2025 02:04 AM

Google News

ADDED : பிப் 28, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'இயர்போன் பயன்படுத்துவோருக்கு, காது கேளாமை ஏற்பட்டால், காதொலி கருவி வாயிலாக கூட மீட்க முடியாது' என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு: நீண்ட நேரம் 'இயர் போன், ஹெட்போன்' போன்றவை பயன்படுத்திய பிறகு, தற்காலிகமாக செவித்திறனில் மாற்றம் ஏற்படுவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஒலி சாதனங்களால் ஏற்படக் கூடிய, காது கேளாமையை தடுப்பதற்கான, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சாதாரண அளவிலான ஒலியில் இருந்தாலும், புளுடூத் இயர்போன், ஹெட்போன் போன்றவற்றின், தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் இயர் போனில், 50 டெசிபல் ஒலிக்கு குறைவாக இருக்குமாறு பயன்படுத்த வேண்டும். குறைந்த ஒலி, அதிக இரைச்சலை தவிர்க்கக் கூடிய, ஹெட் போன்களை பயன்படுத்த வேண்டும்.

இயர்போனை, இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் அதிகமாக மொபைல் போன், 'டிவி' பார்ப்பதை குறைக்க வேண்டும். பொது இடங்களில், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள், சராசரி ஒலி அளவு, 100 டெசிபலுக்கு அதிகமாக வைக்கக் கூடாது.

இது போன்றவற்றால், காது கேட்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்படும்போது, காதுகேட்கும் உதவி கருவிகள் வாயிலாக கூட, கேட்கும் திறனை மீண்டும் பெற முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us