ADDED : ஏப் 03, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் வரை 18 பேர் சாட்சி அளித்துள்ளனர். அவர்களில் 15 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை இன்றைக்கு 3ம் தேதி ஒத்தி வைத்து மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

