sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராகுல் பொய் சொல்கிறார் தமிழக பா.ஜ., ஆவேசம்

/

ராகுல் பொய் சொல்கிறார் தமிழக பா.ஜ., ஆவேசம்

ராகுல் பொய் சொல்கிறார் தமிழக பா.ஜ., ஆவேசம்

ராகுல் பொய் சொல்கிறார் தமிழக பா.ஜ., ஆவேசம்


ADDED : ஜூலை 10, 2024 10:21 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை தி.நகர் கமலாலயத்தில், தமிழக பா.ஜ.,வின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு தலைவர் ராமன் அளித்த பேட்டி:

எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராணுவ வீரர்கள் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ராணுவத்தில், இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் பணியாற்றக்கூடிய அக்னிபாத் திட்டம் சிறந்த திட்டம். அத்திட்டத்தில் வேலைக்கு சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், காஷ்மீரில் உயிரிழந்து விட்டார். அவருக்கு நிதியுதவி அளிக்கவில்லை என, ராகுல் பொய் பிரசாரம் செய்தார்.

இதற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, 98 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், மேலும், 67 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை, உயிரிழந்த வீரரின் தந்தையே தெரிவித்து விட்டார். ஆனாலும், காங்கிரஸார் தொடர்ந்து பொய் சொல்கின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில், ராணுவத்திற்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. பிரதமர் மோடி அரசில், 6.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us