sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் பயணியர் பாதுகாப்பு குழு; ரயில்வே போலீசார் முடிவு

/

பெண் பயணியர் பாதுகாப்பு குழு; ரயில்வே போலீசார் முடிவு

பெண் பயணியர் பாதுகாப்பு குழு; ரயில்வே போலீசார் முடிவு

பெண் பயணியர் பாதுகாப்பு குழு; ரயில்வே போலீசார் முடிவு


ADDED : பிப் 25, 2025 03:09 AM

Google News

ADDED : பிப் 25, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பெண் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே போலீஸ் நிலையங்களில், உள்ளூர் பெண் பயணியரை இணைத்து, பெண் பயணியர் பாதுகாப்பு குழு அமைக்க, ரயில்வே போலீசார் திட்டமிட்டுஉள்ளனர்.

கோவை -- திருப்பதி விரைவு ரயிலில், மகளிர் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணை, மர்ம நபர் கீழே தள்ளிவிட்ட சம்பவம்; பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் போலீசிடம் நடந்த செயின் பறிப்பு, பெண் பயணியர் மத்தியில், அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதைடுத்து, பெண் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

குறிப்பாக, இரவு 10:00 மணிக்கு பிறகு புறப்படும் ரயில்களில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:



சென்னையில் மின்சார ரயில் வழித்தடங்களில் உள்ள, அனைத்து ரயில் நிலையங்களில், நடைமேடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை நகர போலீசாரிடம் இருந்து, 300 போலீசார் பெறப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இது தவிர, வழக்கமாக ரயில்களில் பயணிக்கும் பெண் பயணியர் கொண்ட ஒரு குழுவை மைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, வழக்கமாக பயணிக்கும் பெண் பயணியர் கொண்ட குழு, ரயில்வே போலீஸ் நிலையங்களில் உருவாக்கப்படும்.

இதற்கு முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இறுதி செய்த பிறகு, தமிழக காவல்துறை அறிவிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us