ADDED : மார் 23, 2024 06:13 PM

பெற்றோர்கள் செய்த பாவம் குழந்தைகளை வந்தடையும் என பலரும் நினைக்கிறார்கள்.
அதுபோல் ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால், அதற்கு காரணம் அவரது தந்தைதான் காரணம் என சிலர் சொல்கிறார்கள். இதுவெல்லாம் அறியாமையால் வரும் விளைவாகும் என சொல்கிறார் நபிகள் நாயகம்.
* ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுக்காக தவிர மற்றவைகளுக்கு குற்றவாளியாக மாட்டார்கள்.
* மகனுக்காக தந்தையோ, தந்தைக்காக மகனோ குற்றவாளியாக மாட்டார்கள்.
* பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது.
* ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது.
*எவன் நேர்வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே செல்கிறான்.
எனவே அவரவர் செய்யும் செயல்களுக்கு பலன்களை அவரே அனுபவிக்க வேண்டும்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி

