sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-13

/

ரம்ஜான் சிந்தனைகள்-13

ரம்ஜான் சிந்தனைகள்-13

ரம்ஜான் சிந்தனைகள்-13


ADDED : மார் 13, 2025 11:29 PM

Google News

ADDED : மார் 13, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணாடி போன்றவன்

அபூஜகீல் என்பவர் நபிகள் நாயகத்திடம், ''உங்கள் முகம் பார்க்கவே அருவருப்பாக உள்ளது. நீங்கள் லட்சணமாக இல்லை'' என்றார்.

இதற்கு கோபப்படாமல் சிரித்தாவாறே, ''நீங்கள் சொல்வது உண்மைதான்'' என கூறினார். அந்த சமயத்தில் தோழரான அபூபக்கர் அங்கு வந்தார். நாயகத்திடம், ''உங்கள் முகம் மாசு மருவில்லாத முழு நிலாவாக பிரகாசிக்கிறது. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்'' என்றார். அதற்கு சிரித்தவாறு, ''ஆம்'' என பதிலளித்தார்.

அப்போது அங்கு நின்று இருந்தவர்கள், ''உங்களை அவதுாறாக பேசியவருக்கும், புகழ்ந்து பேசியவருக்கும் ஒரே மாதிரியான பதிலை தந்தீர்கள். இருவரும் கேள்வி கேட்ட போதும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னீர்களே எப்படி'' எனக் கேட்டனர்.

''நான் கண்ணாடி போன்றவன். அபூஜகீல் தனது முகத்தை எனக்குள் பார்த்தார். அது அவலட்சணம் போல தெரிந்தது. அபூபக்கர் தனது முகத்தை என்னில் பார்த்தார். அது முழுநிலா போல காட்சி தந்தது'' என்றார்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி






      Dinamalar
      Follow us