ADDED : ஏப் 07, 2024 06:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரம்ஜான் மாதம் முடிவுற்று ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது சிறப்பு. நபிகள் நாயகம் இதுகுறித்து சொல்லியுள்ளார்.
'யார் ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்று, பிறகு ஷவ்வாலில் ஆறு நாட்கள் நோன்பு வைக்கிறாரோ, அது காலம் முழுவதும் நோன்பு இருந்ததற்கு சமமாகும். இந்த மாதத்தில் வானங்கள் பூமிகள் படைக்கப்பட்டன' என்றார்.
அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) என்பவர் இதற்கான காரணத்தை கூறுகிறார்: ரம்ஜான் அன்று அறுசுவை உண்டதின் மூலம் ஆன்மா பழைய இன்பத்தில் மூழ்க ஆரம்பிக்கும். இந்த நோன்பு அதை கட்டுப்படுத்தும். மேலும் ரம்ஜானில் ஏற்பட்ட சிறு குறைகளுக்கு பரிகாரமாக இருக்கும்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:40 மணி

