sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

/

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

1


ADDED : ஏப் 27, 2024 02:19 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 02:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்.4, 7ல் ராமேஸ்வரத்தில் இருந்து , 3 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இப்படகின் டிரைவர்களாக இருந்த ராபர்ட் 45, பெக்கர் 38, ஜால்சன் 47, ஆகியோரை தவிர மற்ற மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ராமேஸ்வரம் வந்தனர்.

இந்த படகு டிரைவர்கள் 3 பேருக்கும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்ததால் கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து மீனவர்கள் தரப்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி மரியசூசை தாசன் , இவர்கள் டிரைவர் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என மீன்துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள் ஆதாரம் இல்லை என்று கூறியதால் மூவரையும் விடுதலை செய்து ஏப்.30ல் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.

ஏப்.30 க்கு பின் 3 மீனவர்களும் விமான மூலம் சென்னை வந்திறங்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us