sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் ஊழியர்கள் போராட்டம் சம்பளம் பிடிக்க உத்தரவு

/

ரேஷன் ஊழியர்கள் போராட்டம் சம்பளம் பிடிக்க உத்தரவு

ரேஷன் ஊழியர்கள் போராட்டம் சம்பளம் பிடிக்க உத்தரவு

ரேஷன் ஊழியர்கள் போராட்டம் சம்பளம் பிடிக்க உத்தரவு


ADDED : ஜூன் 04, 2024 12:07 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வேலைக்கு வராமல் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் ஊழியர்களுக்கு, 'வேலையில்லை சம்பளம் இல்லை' விதியின் கீழ் சம்பளம் பிடித்தம் செய்யுமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில், 25,000த்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடக்கும் முறைகேடை தடுக்க, அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது பொருட்களின் இருப்பு, பதிவேட்டில் இருப்பதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்; அந்த அபராத தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டது.

இதை திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஊழியர்கள், நேற்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே, வேலைக்கு வராமல் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு, 'வேலையில்லை சம்பளம் இல்லை' விதியின் கீழ் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உத்தரவிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us