ADDED : ஏப் 11, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : துாத்துக்குடி ராமர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கயத்தாறு அருகே தீத்தம்பட்டியில் வண்ணான் ஊருணி உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊருணியை பழைய நிலைக்கு கொண்டு வரக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: சர்வேயில் ஆக்கிரமிப்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் 4 மாதங்களில் அகற்றப்படும். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.

