sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெளிநாட்டு டயருக்கு தடை மத்திய அரசுக்கு கோரிக்கை

/

வெளிநாட்டு டயருக்கு தடை மத்திய அரசுக்கு கோரிக்கை

வெளிநாட்டு டயருக்கு தடை மத்திய அரசுக்கு கோரிக்கை

வெளிநாட்டு டயருக்கு தடை மத்திய அரசுக்கு கோரிக்கை


ADDED : பிப் 22, 2025 09:39 PM

Google News

ADDED : பிப் 22, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று முன்தினம் நடந்தது. சங்கத்தின் தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சீனா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட, தரமற்ற, விலை குறைந்த டயர்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.

அவற்றை அனுமதிக்கும் போது, உள்நாட்டில் தயாரிக்கப்படும் தரமான டயர்களின் விற்பனை பாதிப்பதுடன், டயர் ரீட்ரெட்டிங் தொழில் கடுமையான இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படும். மேலும், அரசுக்கு வருவாய் இழப்பும், உள்ளூர் வர்த்தகமும் பாதிக்கும்.

விரைவில் நிறைவேற்றப்படும் தமிழக பட்ஜெட்டில், டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us