sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: மாநிலம் தழுவிய போராட்டம்  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு 

/

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: மாநிலம் தழுவிய போராட்டம்  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: மாநிலம் தழுவிய போராட்டம்  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு: மாநிலம் தழுவிய போராட்டம்  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு 


ADDED : ஜூன் 28, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:'வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க மறுத்தால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று காலை தைலாபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தித் தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை.

இல்லாத காரணங்களுக்கு வன்னியருக்கான இடஒதுக்கீடு தருவதற்கு தி.மு.க., அரசு மறுத்தால், மாநில அளவில் போராட்டம் நடத்துவோம். அது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்.

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார். பீஹார், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஓடிசா ஆகிய மாநிலங்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது.

இதுகுறித்து சட்டசபையில் பா.ம.க., தலைவர் மணி பேசும்போது குறுக்கிட்ட முதல்வர் பீஹார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார்.

இது தவறு, பீகார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதை எந்த நீதிமன்றமும் ரத்து செய்யவில்லை. முதல்வரும், அமைச்சர் சிவசங்கரும் சட்டசபையில் தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இவர்கள் மீது சட்டசபையில் உரிமை மீறல் பிரச்னையை பா.ம.க., உறுப்பினர்கள் கொண்டு வருவர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு சி.பி.ஐ., விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் நெல்லுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை போதாது.ஓடிசா, தெலுங்கானாவில் வழங்குவது போல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கக்கூடாது.

ஆந்திர முதல்வரின் செயல் இரு மாநில உறவுகளைபாதிக்கும். சட்டசபையில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை. தி.மு.க.,தேர்தல் வாக்குறுதி படி, பேரவை கூட்டத்தை ஆண்டுக்கு நுாறு நாட்கள் நடத்த வேண்டும்.

சட்டசபையின் நிகழ்ச்சிகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு முன் வரவேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us