sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓய்வு அதிகாரி, மனைவிக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறை

/

ஓய்வு அதிகாரி, மனைவிக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறை

ஓய்வு அதிகாரி, மனைவிக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறை

ஓய்வு அதிகாரி, மனைவிக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறை


ADDED : மார் 29, 2024 12:31 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சேலத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றியவர் கணேசன் 78. இவரது பணிக்காலத்தில் 1993 ஜன., முதல் 2003 டிசம்பர் வரை அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கையில் கணேசன், அவரது மனைவி கனிமொழி 77, மற்றும் குடும்பத்தினர் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக 53 லட்சம் ரூபாய் சொத்து குவித்தது தெரிய வந்தது.

இருவர் மீதும் 2003 ஆக.25ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 20 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.

நீதிபதி மோகன ரம்யா, கணேசன், கனிமொழி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us