sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டுறவு கடைகளில் தேங்காய் விற்பனை 

/

கூட்டுறவு கடைகளில் தேங்காய் விற்பனை 

கூட்டுறவு கடைகளில் தேங்காய் விற்பனை 

கூட்டுறவு கடைகளில் தேங்காய் விற்பனை 


ADDED : மார் 29, 2024 12:36 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கூட்டுறவு காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு தேங்காய் விற்பனை துவங்கியுள்ளது. அதைதொடர்ந்து விரைவில் ரேஷன் கடைகளிலும் விற்கப்பட உள்ளது.

தமிழகத்தில் தேங்காய் விளைச்சல் அதிகம் உள்ளது. எனவே கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளிலும் பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும் விற்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக 'டேன்பெட்' எனப்படும் தமிழக கூட்டுறவு விற்பனை இணையம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கூட்டுறவு விற்பனை சங்கம் வாயிலாக அதில் உறுப்பினராக உள்ள விவசாயிகளிடம் இருந்து 10000 தேங்காய்கள் கொள்முதல் செய்துள்ளது. இவை சென்னையில் உள்ள நான்கு கூட்டுறவு பண்டக சாலைகளுக்கு தலா 2500 - 3000 என்ற எண்ணிக்கையில் அனுப்பப்பட்டு உள்ளன. இந்த தேங்காய்கள் அந்த பண்டக சாலைகள் நடத்தும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நேற்று முதல் விற்கப்படுகின்றன.

கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விவசாயிகளிடம் இருந்து கிலோ தேங்காய் 30 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோவில் ஒன்று அல்லது இரு தேங்காய் நிற்கின்றன. போக்குவரத்து செலவு சேர்த்து ஒரு தேங்காய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படும். இந்த விலை வெளிச்சந்தையை விட சற்று குறைவாகவே இருக்கும். தேவையை பொறுத்து அதிக தேங்காய் கொள்முதல் செய்யப்படும். விரைவில் ரேஷன் கடைகளிலும் விற்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us