ADDED : மார் 15, 2025 01:01 AM
'தமிழக செமிகண்டக்டர் இயக்கம் - 2030' என்ற ஐந்தாண்டு கால திட்டம், 500 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
வரும் நிதியாண்டில், 10 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்படும்
சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பயன்பெற, காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம்; விழுப்புரம், சாரம்; கரூர், நாகம்பள்ளி; திருச்சி, சூரியூர்; மதுரை, கருத்தபுளியம்பட்டி; ராமநாதபுரம், தனிச்சியம்; தஞ்சை, நடுவூர்; திருநெல்வேலி, நரசிங்கநல்லுார் ஆகிய ஒன்பது இடங்களில், 398 ஏக்கரில், 366 கோடி ரூபாயில், புதிய தொழிற்பேட்டைகளை, 'சிட்கோ' உருவாக்கும். இதன் வாயிலாக, 17,000 பேர் வேலை வாய்ப்பு பெறுவர்
கலைஞர் கைவினை திட்டத்தில், 19,000 கைவினைஞர்களுக்கு உதவும் வகையில், மானிய நிதியாக, 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்