தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ செந்தில் பாலாஜி காவல் 45வது முறை நீட்டிப்பு

செந்தில் பாலாஜி காவல் 45வது முறை நீட்டிப்பு

செந்தில் பாலாஜி காவல் 45வது முறை நீட்டிப்பு


ADDED : ஜூலை 10, 2024 10:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2024 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 45வது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது புழல் சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று பிற்பகல் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் நீதிமன்ற காவலை, 45வது முறையாக, நாளை வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us