sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலியல் துன்புறுத்தல் 2 பேருக்கு 'குண்டாஸ்'

/

பாலியல் துன்புறுத்தல் 2 பேருக்கு 'குண்டாஸ்'

பாலியல் துன்புறுத்தல் 2 பேருக்கு 'குண்டாஸ்'

பாலியல் துன்புறுத்தல் 2 பேருக்கு 'குண்டாஸ்'

1


ADDED : பிப் 15, 2025 04:47 AM

Google News

ADDED : பிப் 15, 2025 04:47 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பாலியல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அடுத்த ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு,55; இவர், 2024ம் ஆண்டு அக்., மாதம் 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் சிதம்பரம் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதேப் போன்று, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் அன்பு (எ) அன்புகுமார், 30; சமூக வலைதளங்கள் மூலமாக கடலுாரைச் சேர்ந்த 17வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

இவர் மீது கன்னியாகுமரி, விருதுநகர், சென்னை பகுதி பெண்களிடம் சமூகவலைதளங்கள் மூலம் பழகி நகை, பணம் ஏமாற்றியது தொடர்பான வழக்குகள் உள்ளது.

இருவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, பாபு, அன்புகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us