கல்வி நிறுவன கட்டட வரன்முறை அவகாசம் ஆறு மாதம் நீட்டிப்பு
கல்வி நிறுவன கட்டட வரன்முறை அவகாசம் ஆறு மாதம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 12, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விதிகளை மீறிய கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த, மேலும், ஆறு மாதம் அவகாசம் அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2011க்கு முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த திட்டம், 2020 பிப்., 18ல் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இத்திட்டத்துக்கு, ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் பெறப்பட்ட மனுக்கள், பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளன. மீண்டும், ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதை ஏற்று, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, நகர், ஊரமைப்பு துறை இயக்குனர் கணேசனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது தொடர்பான அறிவிக்கையை நாளிதழ் வாயிலாக வெளியிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

