ADDED : மார் 29, 2024 12:06 AM
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி லோக்சபா தொகுதியில், பா.ம.க., வேட்பாளர் சவுமியா போட்டியிடுகிறார். அவர் நேற்று முன்தினம், கொளத்துார் ஒன்றியம் காவேரிபுரம் ஊராட்சி சத்யா நகரில் வசிக்கும் முஸ்லிம்களை சந்தித்து, ஹிந்தியில் பேசி ஓட்டு சேகரித்தார். அப்போது குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தனர்.
அதற்கு சவுமியா, 'எனக்கு ஓட்டு போட்டால், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறேன்' என, ஹிந்தியில் பதிலளித்தார்.
l கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், காங்., சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். மாவட்டம் முழுதும் பிரசாரம் செய்து வரும் அவர், நேற்று முன்தினம் மதியம் ஓசூர் எம்.ஜி., சாலையில் உள்ள ஜாமியா மஸ்ஜித் மசூதியில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களை கட்டித் தழுவி, அவர்களிடம் உருது மொழியில் பேசி, கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார்.

