ADDED : மார் 07, 2025 02:47 AM
சென்னை:ஹோலி பண்டிகையையொட்டி, சென்னை - சந்திரகாச்சி, போத்தனுார் - பீஹாருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே, வெளியிட்ட அறிக்கை:
l சென்னை சென்ட்ரலில் இருந்து, நாளை மற்றும் 12ம் தேதி இரவு 11:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் காலை 7:15 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும்.
l சந்திரகாச்சியில் இருந்து, மார்ச் 10, 14ம் தேதிகளில் காலை 9:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 3:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.
l கோவை, போத்தனுாரில் இருந்து, மார்ச் 8, 15ம் தேதிகளில் காலை 11:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சென்னை பெரம்பூர் வழியாக, அடுத்த மூன்றாவது நாளில் மதியம் 2:30 மணிக்கு, பீஹார் மாநிலம் பாருனி செல்லும்.
l பாருனியில் இருந்து, மார்ச் 11, 18ம் தேதிகளில் இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த 4வது நாள் அதிகாலை 3:45 மணிக்கு போத்தனுார் செல்லும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.