sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

/

போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

போலீசாருக்கு பயணப்படி வழங்கப்படவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

9


ADDED : ஜூன் 29, 2024 01:30 PM

Google News

ADDED : ஜூன் 29, 2024 01:30 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தேவையில்லாத வீண் விளம்பரங்களுக்கு, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் தி.மு.க., அரசு முனைப்பாக இருக்கிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், லோக்சபா தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த மார்ச் 16, 2024 முதல் ஜூன் 6, 2024 வரையிலான 83 நாட்களுக்கான பயணப்படி வழங்க ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை பிறப்பித்த பிறகும், இன்னும் போலீசாருக்கான பயணப்படி வழங்கப்படவில்லை.

ஏற்கனவே, அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு. தேவையில்லாத வீண் விளம்பரங்களுக்கு, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் முனைப்பாக இருக்கும் திமுக அரசு, போலீசாருக்கு வழங்க வேண்டிய பயணப்படியை வழங்கத் தாமதிப்பது, அவர்களிடையே பணியாற்றும் ஆர்வத்தைக் குறைத்து விடும். உடனடியாக, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட போலீசார்களுக்கு, 83 நாட்களுக்கான பயணப்படியை வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us