ராமேஸ்வரம் மீனவர்கள் கைது விடுவிக்க ஸ்டாலின் கடிதம்
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது விடுவிக்க ஸ்டாலின் கடிதம்
ADDED : பிப் 24, 2025 02:23 AM
சென்னை,: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
ராமேஸ்வரத்தில் இருந்து, ஐந்து மீன்பிடி படகுகளில், மீன்பிடிக்க சென்ற, 32 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் மீன்பிடி விசைப்படகுகளையும், பறிமுதல் செய்துள்ளனர்.
நடப்பு ஆண்டில் மட்டும், எட்டு வெவ்வேறு சம்பவங்களில், 16 படகுகளுடன், 119 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்படுத்தப்பட்டு உள்ளனர். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கூட்டு பணிக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும்.
மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைதான மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

