ADDED : பிப் 26, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:இரண்டாவது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தால், பல லட்சம் ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், சிறைபிடித்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளையும் விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர். இரண்டாம் நாளாக நேற்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்ததால், கடலோர பகுதிகள் வெறிச்சோடின.
இதனால், ராமேஸ்வரத்தில் மீன்வரத்து இன்றி, மதுரை, கோவை, சேலம், கேரளா மார்க்கெட்டுக்கு மீன்களை அனுப்ப முடியாமல் வியாபாரிகள் திணறினர்.
பல லட்சம் ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர்களுக்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.