உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 11, 2024 05:34 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த எண்ணாநகரம் கிராமம், கரைமேடு, மேல தெருவை சேர்ந்தவர் சுபாஷ் மகள் கீர்த்தி,15; பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பு சென்றார்.
இந்நிலையில், கீர்த்தி தனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என சில தினங்களாக பெற்றோரிடம் கூறி வந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
