தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ உதவித்தொகை இன்றி மாணவிகள் தவிப்பு

உதவித்தொகை இன்றி மாணவிகள் தவிப்பு

உதவித்தொகை இன்றி மாணவிகள் தவிப்பு


ADDED : ஏப் 06, 2024 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:தமிழக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு 3 முதல் 5 ம் வகுப்பு வரை 500 ரூபாயும், ஆறாம் வகுப்புக்கு ஆயிரம் ரூபாயும், ஏழு, எட்டாம் வகுப்புக்கு 1500 ரூபாயும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தொகை மாணவிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் இந்த உதவித்தொகை பாதி மாணவிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

இது குறித்து ஆதிதிராவிட நலத்துறையில் கேட்டால் அனைத்து மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டது என்றனர். வங்கியில் கேட்டால் ஆதார் கார்டுகள் 'அப்டேட்' செய்யாமல் இருக்கலாம். அப்டேட் செய்த விபரங்களை வங்கிக்கு தெரிவித்தால் உதவித்தொகை கணக்கில் ஏறும். கணக்கில் விபரங்கள் இல்லாவிடில் பணம் மீண்டும் ஆதிதிராவிட நலத்துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கும் என்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையின் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us