sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

100 நாட்டுக்கோழி பண்ணைகளுக்கு மானியத்தில் 'இன்குபேட்டர் மிஷின்'

/

100 நாட்டுக்கோழி பண்ணைகளுக்கு மானியத்தில் 'இன்குபேட்டர் மிஷின்'

100 நாட்டுக்கோழி பண்ணைகளுக்கு மானியத்தில் 'இன்குபேட்டர் மிஷின்'

100 நாட்டுக்கோழி பண்ணைகளுக்கு மானியத்தில் 'இன்குபேட்டர் மிஷின்'


ADDED : மார் 05, 2025 05:22 AM

Google News

ADDED : மார் 05, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி ; தமிழகத்தில், நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முதன் முறையாக, 'இன்குபேட்டர் மிஷின்' வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை மேம்படுத்தவும், அதன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டவும், பல்வேறு சலுகைகளுடன், மானியமும் வழங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டில், 250 கோழிகளுடன் சிறிய அளவிலான பண்ணை அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது.

இதற்காக மாநிலத்தில், 100 பயனாளிகள், கால்நடைத்துறை வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதன்முறையாக, 50 சதவீத மானியத்தில், அடைக்காப்பான் என்ற 'இன்குபேட்டர் மிஷின்' தரப்பட்டுள்ளது.

கால்நடை துறையினர் கூறியதாவது:

கோழிகளை வளர்க்க கொட்டகை, உபகரணங்கள், தீவனத்தட்டு, நான்கு மாத தீவனம் என, ஒரு பண்ணை அமைக்க, 3 லட்சத்து, 13,750 ரூபாய் என மதிப்பிடப்பட்டது. இதில், 1 லட்சத்து 56,875 ரூபாய், அதாவது 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில், உரிய தகுதி அடிப்படையில், 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு பயனாளிக்கும், நான்கு வார வயதில், 250 நாட்டுக்கோழி குஞ்சுகள், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

முதன் முறையாக, 'இன்குபேட்டர் மிஷின்' 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக பயனாளிகள், நாட்டுக்கோழிகளின் இனவிருத்தியை பெருக்க முடியும். இறைச்சி, முட்டை விற்பனையை துரிதப்படுத்தி, அதிக லாபம் சம்பாதிக்க முடியும்.

இவ்வாறு, கூறினர்.

விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த நிதியாண்டிற்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, அறிவிப்பு வெளியிடும் போது விண்ணப்பிக்கலாம். அப்போது, பண்ணை அமைக்க குறைந்தபட்சம், 625 சதுரடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். பண்ணை அமைவிடம், மக்கள் குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். பண்ணை அமையவுள்ள இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் வேண்டும். பயனாளி அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், பண்ணைக்கு மின் இணைப்பும் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் நகல், 50 சதவீதம் நிதி ஆதார ஆவணங்கள், மூன்று ஆண்டுகளுக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உத்தரவாத கடிதம் இணைக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us