ADDED : செப் 12, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தற்போது சாஸ்த்ரா பல்கலையில் இயக்குனராக உள்ளார்.
இவருக்கு, சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், துணைத் தலைவராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, மத்திய உயர்கல்வித் துறை சார்பு செயலர் வரதராஜன் வெளியிட்டுள்ளார்.
இந்த பதவியில் சுதா சேஷய்யன் மூன்றாண்டுகளுக்கு தொடர்வார்.