ADDED : செப் 17, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நேற்று, 11 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவானதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் மிக அதிகபட்சமாக, மதுரை, மதுரை விமான நிலையத்தில், 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியசுக்கு மேலாக வெப்பம் பதிவானது.
இதேபோன்று, சென்னை மீனம்பாக்கம், அதிராம்பட்டினம், கடலுார், ஈரோடு, கரூர் பரமத்தி, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, தஞ்சை, திருச்சி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேலாக வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.