ADDED : பிப் 26, 2025 05:18 AM

சிங்கம்புணரி : தமிழக காங்கிரஸ் எம்.பி., கார்த்தி அளித்த பேட்டி:
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்துவது இயல்புதான். அந்த வகையில்தான், தங்களுடைய கோரிக்கைகளுக்காக தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டனர்.
அவர்களுக்கான கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசு ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
'நாங்கள் நினைத்தால், நொடியில் மத்திய அரசுக்கு மாநில அரசு செலுத்தப்படும் வரியை நிறுத்தி விடுவோம்' என தி.மு.க., தரப்பில் சொல்கின்றனர். அப்படி செய்ய முடியுமா என தெரியவில்லை.
மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோரின் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட்ட அ.தி.மு.க., கட்சி, கூட்டுத் தலைமையின் கீழ் செயல்படுமா என்பது கேள்விக்குறிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

