'தமிழக சட்டம் ஒழுங்கு நிலை 'தினமலர்' படித்தால் தெரியும்'
'தமிழக சட்டம் ஒழுங்கு நிலை 'தினமலர்' படித்தால் தெரியும்'
ADDED : ஜூலை 23, 2024 08:47 PM
தமிழக மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாததாக தி.மு.க., அரசு உள்ளது. சிவகங்கையில் ஆண்டுதோறும் நடத்தக்கூடிய பூ திருவிழாவை கூட சிறப்பாக நடத்த முடியவில்லை. அதுதொடர்பான நிகழ்ச்சி அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதையும், சிவகங்கை நகராட்சியில் என்ன நடக்கிறது என்பதையும் 'தினமலர்' நாளிதழ் படித்தால் தெரிந்து கொள்ளலாம். தி.மு.க., அரசு சார்பில் சட்டசபையில் ஒன்று பேசுகின்றனர். நடைமுறையில் வேறு ஒன்றைச் செய்கின்றனர்.
அமைச்சர் துரைமுருகன், பொதுமக்கள் தங்கள் தேவைக்கு வண்டல் மண்ணை அள்ளிக் கொள்ளலாம் என்று சட்டசபையில் பேசுகிறார். ஆனால் மாவட்ட நிர்வாகமோ, அப்படி ஒரு உத்தரவு வரவில்லை என்று கூறுகிறது. மாவட்டத்தில் மானாமதுரையில் நடைபெறக்கூடிய மணல், கிராவல் மண் கொள்ளையை யாராலும் தடுக்க முடியவில்லை.
பாஸ்கரன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்,

