sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிவாரணத்தை உயர்த்தியது தமிழகம்; அபராதத்தை அதிகரித்தது இலங்கை

/

நிவாரணத்தை உயர்த்தியது தமிழகம்; அபராதத்தை அதிகரித்தது இலங்கை

நிவாரணத்தை உயர்த்தியது தமிழகம்; அபராதத்தை அதிகரித்தது இலங்கை

நிவாரணத்தை உயர்த்தியது தமிழகம்; அபராதத்தை அதிகரித்தது இலங்கை


ADDED : மார் 11, 2025 12:56 AM

Google News

ADDED : மார் 11, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : இலங்கையில் கைதாகும் மீனவர்கள், படகிற்கு தமிழக அரசு கூடுதல் நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்த நிலையில், கைது செய்யப்படும் மீனவர்களுக்கான அபராதத்தை உயர்த்தி இலங்கை அரசு அதிர்ச்சி அளித்துள்ளது.

ராமேஸ்வரம் முதல் நாகை மாவட்டம் வரை உள்ள கடலோர பகுதியில் மீனவர்கள் விசைப்படகு, நாட்டுப்படகில் மீன் பிடிக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ளதால், தமிழக -- இலங்கை மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறை பிடிக்கின்றனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகள், பல மாதம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க, தமிழக மீனவர்கள் போராடுகின்றனர்.

இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி பிடிபடும் படகிற்கு, 6 லட்சம் ரூபாயாக இருந்த நிவாரணத்தை தற்போது 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், சிறையில் உள்ள மீனவர் குடும்பத்திற்கான நிவாரணம் ஒரு நாளுக்கு, 350 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வழங்கவும் மார்ச் 5ல் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனால் ஆவேசமடைந்த இலங்கை மீனவர்கள், 'நிவாரணத்தை உயர்த்தியுள்ளது, எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தமிழக அரசு ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது.

'நீதிமன்றம் மீனவர்களுக்கு விதிக்கும் அபராத தொகையை உயர்த்த வேண்டும்' எனக்கோரி போராட்டம் நடத்தினர்.

இதன் எதிரொலியாக, இலங்கை பிடித்து செல்லும் படகுகளுக்கு இதுவரை 50,000 ரூபாய் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த அபராதம் தற்போது உயர்த்தப்பட்டுஉள்ளது.

மார்ச் 7ல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தலா, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அபராதம் உயர்வால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us