ADDED : பிப் 10, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மது வகைகளை விற்கிறது.
இந்த கடைகளுக்கு, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டும் விடுமுறை. அதன்படி, நாளை வடலுார் ராமலிங்கர் நினைவு நாள் என்பதால் அன்று மது கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மதுக்கூடங்கள் மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், முறைகேடான மது விற்பனையை தடுக்குமாறு மாவட்ட மேலாளர்களை அறிவுறுத்திஉள்ளது.

