ADDED : ஏப் 09, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசின் உத்தரவை அடுத்து, வரும் 17ம் தேதி முதல், 19ம் தேதி வரையும்; ஓட்டு எண்ணிக்கை நடக்கும் ஜூன் 4ம் தேதியும் மது கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, 'டாஸ்மாக்' நிறுவனம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், மதுபானக்கிடங்குகள், மதுக்கூடங்கள் ஆகியவற்றை மூட வேண்டும்என்றும் தெரிவித்து உள்ளது.
அவை மூடப்படுவதை சரியாக கண்காணிக்குமாறும், தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் எச்சரித்துள்ளது.

