sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழில் அதிபர் அதானி சென்னை வந்த பின்னணி

/

தொழில் அதிபர் அதானி சென்னை வந்த பின்னணி

தொழில் அதிபர் அதானி சென்னை வந்த பின்னணி

தொழில் அதிபர் அதானி சென்னை வந்த பின்னணி


ADDED : ஜூலை 11, 2024 11:19 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை வந்த அதானி குழும தலைவர் கவுதம் அதானி, தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக, தமிழக அரசின் உயர் மட்டத்தினருடன் ஆலோசனை நடத்திஉள்ளார்.

தமிழக அரசு, இந்தாண்டு ஜனவரியில் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதானி குழுமம், 42,768 கோடி ரூபாய் முதலீடு செய்ய, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

சந்திப்பு


இந்நிலையில், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார்.

ஆழ்வார்பேட்டையில் சில மிக முக்கிய நபர்களை சந்தித்து பேசியுள்ளார். முதல்வரையும் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளும் முகமையான, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

அரசு, தனியாருடன் கைகோர்த்து திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு, அரசு நிலம் வழங்கும். கட்டுமான பணிகளை தனியார் நிறுவனம் தன் செலவில் மேற்கொள்ள வேண்டும்.

ஆர்வம்


இத்திட்டத்தை செயல்படுத்தவும், அதானி குழுமம் ஆர்வம் காட்டி வருகிறது.

ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை செயல்படுத்தவும், இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.

சென்னை வந்த கவுதம் அதானி, அவை குறித்தும், எண்ணுார் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்தும், ஆலோசனை நடத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us