sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கன்னியாகுமரி கடலில் பாலம்: விரைவில் பயன்பாட்டுக்கு வருது

/

கன்னியாகுமரி கடலில் பாலம்: விரைவில் பயன்பாட்டுக்கு வருது

கன்னியாகுமரி கடலில் பாலம்: விரைவில் பயன்பாட்டுக்கு வருது

கன்னியாகுமரி கடலில் பாலம்: விரைவில் பயன்பாட்டுக்கு வருது

5


ADDED : ஜூன் 09, 2024 05:53 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 05:53 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கன்னியாகுமரியில், கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு பாறையையும் இணைப்பதற்கான கடல்சார் பாதசாரிகள் பாலம், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சாலை வசதிகளை பெருக்குவதில், முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.

முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில் 4,984 கோடி ரூபாய் மதிப்பில், 577 கி.மீ., நீள சாலைகளை, நான்குவழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை, 2,608 கோடி ரூபாய் செலவில், 215 கி.மீ., நீள சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன; மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல், 2,465 கோடி ரூபாயில், 1,710 கி.மீ., சாலைகளை, இருவழிச் சாலைகளாக மாற்றும் பணி எடுக்கப்பட்டது.

இதுவரை, 1,860 கோடி ரூபாயில், 1,407 கி.மீ., சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில், 109 புறவழிச்சாலை பணிகள் எடுக்கப்பட்டு, 18 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 21 பணிகள் நடந்து வருகின்றன. 27 பணிகள் நில எடுப்பு நிலையிலும், 38 பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலும் உள்ளன.

குமரி முனையில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம், 37 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.

இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us