ADDED : மே 06, 2024 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர், சென்னை கோயம்பேட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி கனிமொழிக்கும், வட வீக்கம் கிராமத்தை சேர்ந்த தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் சிவா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.
சில நாட்களுக்கு முன், சிவாவின் மொபைல்போன் அழைப்பை கனிமொழி நிராகரித்துள்ளார். இந்நிலையில், கனிமொழிக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த சிவா, கனிமொழியுடன் படுக்கையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டி, அதை கனிமொழியின் கணவர் முருகனுக்கு அனுப்பியுள்ளார். அதிர்ச்சிடைந்த முருகன் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிவாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.