sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடு புகுந்து மனைவியை வெட்டிய போலீஸ்காரர் கைது

/

வீடு புகுந்து மனைவியை வெட்டிய போலீஸ்காரர் கைது

வீடு புகுந்து மனைவியை வெட்டிய போலீஸ்காரர் கைது

வீடு புகுந்து மனைவியை வெட்டிய போலீஸ்காரர் கைது


ADDED : ஜூன் 25, 2024 10:55 PM

Google News

ADDED : ஜூன் 25, 2024 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தகராறில் மனைவியின் வீடு புகுந்து அவரை அரிவாளால் வெட்டிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

பரமக்குடி கன்னி சுந்தர்ராஜன் தெரு ஷர்மிளா 23, எமனேஸ்வரம் சிலோன் காலனி நாகேந்திரன் 33. இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது. நாகேந்திரன் திருவாரூர் இடையூர் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றுகிறார்.

இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். ஷர்மிளா இங்கு தனது தாய் வீட்டில் வசிக்கிறார். அவர் பரமக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஜீவானாம்ச வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் நாகேந்திரன் ஜூன் 27ல்(நாளை) ஆஜராக சம்மன் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு மனைவியின் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ஷர்மிளாவின் தலை, கன்னம், கழுத்து, கை ஆகிய இடங்களில் வெட்டுப்பட்டு சரிந்தார். பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். நாகேந்திரனை, பரமக்குடி டவுன் எஸ்.ஐ., வெங்கடேஷ் கைது செய்தார். பின்னர் அவர் ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us