UPDATED : ஏப் 08, 2024 10:12 AM
ADDED : ஏப் 08, 2024 10:08 AM

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 1,280 ரூபாய் கிடுகிடு உயர்வை சந்தித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதனால் நகை வாங்க நினைக்கும் மக்கள் கலக்கமடைந்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்.,08) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 1,280 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து, ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

